Wednesday 13 July 2016

அரசு (பொது) ஊழியர்களால் செய்யப்படும் / சம்மந்தப்பட்ட குற்றங்கள்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 166
ஒரு அரசு ஊழியர், சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையினை செய்யாமலிருப்பது ஓர் ஆண்டு வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 167

ஒரு பொது ஊழியர் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான ஒரு ஆவணத்தையோ / மொழி பெயர்ப்பையோ உருவாக்குவது 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

நேரடியாக பெறுதல் மட்டுமே லஞ்சம் அல்ல...

"அ" என்ற வங்கியருக்கு சாதகமாக வழக்கை முடிவு செய்வதற்காக "ஆ" என்ற நீதிபதி தனது சகோதருக்கு ஓர் வேலையினை "இ" என்பவரிடமிருந்து கேட்டு பெறுகின்றார் என்றால் இதுவும் லஞ்சமே.

1 comment: