Monday 11 July 2016

உடந்தையாயிருத்தல் பற்றி..

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 107

1. ஒரு செயலை செய்ய தூண்டுதல்.
2. ஒரு செயலை செய்ய ஒருவரோ/ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாலோ சதி திட்டம் தீட்டப்படுதல்.
3. செய்யப்பட வேண்டிய செயலை செய்யாமல் சட்ட விரோதமாக‌ விடுவிப்பு செய்தல்.
இவை அனைத்தும் அந்த செயலிற்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொருள் கொள்ளப்படும்.
இவை மட்டுமல்ல.. வேண்டுமென்றே தவறாக திரித்து கூறுவதன் மூலம் தாம் வெளிபடுத்த வேண்டிய  முக்கியமான விழயத்தை வேண்டுமென்றே மறைத்தல் என்பது கூட உடந்தையாயிருந்தல் என்பதே ஆகும்.
உதாரணம்:
"அ" என்பவரை கைது செய்ய  நீதிமன்ற வாரண்ட் பெற்ற "ஆ" என்ற பொது அலுவலரிடம், "இ" என்பவர் வேண்டுமென்றே "ஈ" என்ற அப்பாவியினை "அ" என்று தவறாக அடையாளங்காட்டி கைது செய்ய துண்ட செய்கின்றார்.
இந்த செயலில் "இ" என்பவர் உடந்தை குற்றம் செய்தவராகின்றார்.


No comments:

Post a Comment