Wednesday 27 July 2016

சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல்

பொய் என்று தெரிந்தே சாட்சியினை பயன் படுத்துதல் இந்திய தண்டனை சட்டம் 196 ன் கீழ் குற்றம்.
பொய் சான்றிதழ் அளித்தல் (அ) அதற்கு கையெப்பமிடுதல் இந்திய தண்டனை சட்டம் 197 ன் கீழ் குற்றம்.

குற்றத்திற்கான சாட்சியத்தினை மறைத்தல் (அ) குற்றவாளியினை காப்பாற்ற பொய்த்தகவல் அளித்தல் இந்திய தண்டனை சட்டம் 201 ன் கீழ் குற்றம். இவ்வாறான செயல்கள், மரண தண்டனைகளுக்குரிய குற்றமாக இருக்கும் பட்சத்தில், 7 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். ஆயுள்தண்டனைகளுக்குரிய / 10 ஆண்டுகள் தண்டிக்கத்தக்க குற்றமாக இருக்கும் பட்சத்தில், 3 ஆண்டுகள் வரையிலான சிறை & அபராதம். 10 ஆண்டுக்களுக்கு கீழான சிறை தண்டனைக்குரிய குற்ற செயல்களாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு அதிக கால அளவிற்கு சிறை தண்டணை அளிக்க முடியுமோ அதில் 1/4 கால அளவில் சிறை & அபராதம்.


No comments:

Post a Comment